விழுப்புரம்: விழுப்புரம் மகாலட்சுமி குபேரன் கோவிலில், ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம் வரும் 3ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் கிழக்குப் பாண்டி ரோட்டிலுள்ள, மகாலட்சுமி குபேரன் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம், வரும் 3ம் தேதி நடக்கிறது. அன்று காலை 6:00 மணிக்கு கோபூஜை, 7:00 மணிக்கு சங்கல்பம், 8:00 மணிக்கு அஷ்டலட்சுமி ஹோமம், 10:00 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் 11:00 மணிக்கு கடம் புறப்பாடு மற்றும் பூர்ணாஹீதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.