திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி ஆறாம் திருவிழாவை முன்னிட்டு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பல்லக்கில் திருஞான சம்பந்தரும் 16கால் மண்டபம் முன்பு எழுந்தருளினர். அங்கு கோயில் ஓதுவாரால், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலைக்கான பாடல்களை பாடப்பட்டது. தீபாராதனை முடிந்து சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. ஏப்.4ல் சூரசம்ஹாரம், ஏப்.5ல் பட்டாபிஷேகம், ஏப். 6ல் திருக்கல்யாணம், ஏப்.7ல் தேரோட்டம், ஏப்.8ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.