சித்திரை முதல்நாள் கோயில்களில் பஞ்சாங்க படனம் நடக்கும். அதில் புத்தாண்டுக்குரிய பலனைச் சொல்வர். பஞ்சாங்கம் என்பதை பஞ்ச அங்கம் (ஐந்து பகுதி) என்று பிரிப்பர். யோகம், திதி, கரணம், வாரம், நட்சத்திரம் ஆகிய இந்த ஐந்தையும்சொல்வதும், கேட்பதும் புனிதமானது. யோகம்- நோய் நீங்கும். திதி- நன்மை அளிக்கும்; கரணம்- வெற்றி உண்டாகும்; வாரம்(கிழமை)- ஆயுள் கூடும். நட்சத்திரம்- பாவம் போக்கும்.