செஞ்சி கமலக்கன்னியம்மன் கோவில் தேர்திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2015 12:04
செஞ்சி: செஞ்சி கமலக்கன்னியம்மன் கோவில் தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. செஞ்சி கோட்டை ராஜகிரி மலைமீதுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கமலக்கன்னியம்மனக்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு சி த்திரை தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று 6 மணிக்கு ஸ்ரீகமலக்கன்னியம்மன், ஸ்ரீமகா மாரியம்மன், ராஜகாளியம்மன், கோட்டை வீரனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 6.30 மணிக்கு மகா மாரியம்மன் கோவிலில் கணபதி, லட்சுமி மற்றும் 108 திரவிய ஹோமம் நடந்தது. பின்னர் 7 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. மாலை 6 மணிக்கு காப்பு அணிதலும், இரவு சாமி வீதி உலாவும் நடந்தது. இதில் கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் உபயதாரர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் 27ம் தேதி வரை தினமும் சிறப்பு, அபிஷேக, அலங்காரமும் வழிபாடும் நடத்த உள்ளனர். மறுநாள் (28ம் தேதி) காலை 6 மணிக்கு 108 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து பால் அபிஷேகமும் , காலை 10 மணிக்கு மகா மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தலும், பகல் 1.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது. தொடர்ந்து 29ம் தேதி காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டும், மாலை 4 மணிக்கு காப்பு களைதலும் நடக்க உள்ளது.