Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு ... அழியும் நிலையில் மராட்டியர் கால ஓவியங்கள்! அழியும் நிலையில் மராட்டியர் கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
234 கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து?அறநிலைய துறை பரிந்துரை!
எழுத்தின் அளவு:
234 கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து?அறநிலைய துறை பரிந்துரை!

பதிவு செய்த நாள்

04 மே
2015
10:05

ஸ்ரீரங்கம், மதுரை, பழநி உட்பட, 234 கோவில்களில், சிறப்பு கட்டண தரிசன முறையை, தமிழக அரசு விரைவில் ரத்து செய்ய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும், 38 ஆயிரம் கோவில்கள், அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ளன. இதில், 4,000 கோவில்கள் அதிக வருவாய் உடையவை. இவற்றில், 234 கோவில்களில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் இருந்து, 5 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை, சிறப்பு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

2013ம் ஆண்டு...: சுவாமியை தரிசனம் செய்ய கட்டணம் வசூலிப்பது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த, 2013ல், பக்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு காரணமாக, 142 கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை அறநிலையத் துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனர்.இதற்கான உத்தரவு எழுத்துவடிவில் இல்லாததால், அடுத்த சில மாதங்களிலேயே, கட்டண வசூல் மீண்டும் துவங்கியது. இந்நிலையில், சிறப்பு கட்டண தரிசனத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

அரசு ஏற்பு: இதுகுறித்து, அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்ரீரங்கம், மதுரை, பழநி உள்ளிட்ட, 234 கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்வது குறித்து, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுஉள்ளது. இதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. விரைவில், இதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும். இது ரத்தானால் கோவில்களில், அனைவருக்கும் ஒரே தரிசன முறை அமலுக்கு வரும். இதனால், கட்டண அடிப்படையில் பக்தர்களை பிரித்து பார்ப்பது முடிவுக்கு வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar