பேசாத பிள்ளைகளை பிழைக்கத் தெரியாதவன் என்று அடைமொழி கொடுத்து அழைக்கிறார்கள். ஆனால், அதிகம் பேசாமல் இருப்பதையே இஸ்லாம் ஆதரிக்கிறது. “வாய்மூடி இருப்பது இஸ்லாத்தில் தலை போன்றதாகும் என்று வாயைக் குறைக்கும் தன்மைக்கு பெரும் சிறப்பு தரப்பட்டுள்ளது. குறைத்துப் பேசுபவர்களின் வார்த்தைகள் மணிமணியாக, எதார்த்தமானதாக இருக்கும். பொறுமை அதில் கலந்திருக்கும். “நாவின் பத்தினித்தனம் வாய்மூடி இருப்பதாகும்,” என்கிறார் நபிகள் நாயகம். மவுனமாக இருப்பதால், ஒரு மனிதனுக்கு கிடைக்கும் கண்ணியமானது, அறுபது ஆண்டு வணக்கத்தை விட மேலானது. ஒருவர் நமக்கு துன்பமே செய்தாலும் கூட, அவருக்கெதிரான பாவம் செய்யாமல் சகித்துக் கொள்வது, அந்த துன்பங்களை இறைவனே தந்ததாகக் கருதி பொறுமை கொள்வது, இறைவனுக்குரிய கடமைகளான தொழுகை, நோன்பு போன்றவற்றில் ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொள்வது, இறைவன் நமக்கு தரும் சோதனைகளைப் பொறுத்துக் கொள்வது ஆகிய பண்புகளை இஸ்லாம் வளர்க்கச் சொல்கிறது. நோன்பிருக்கும் சமயத்தில் இந்தப் பொறுமையை வளர்த்துக் கொள்வோமே!
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.49 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.19 மணி.