ஓம் என்பதை பிரணவ மந்திரம் என்பர். பிராணனை (உயிர்) காக்கும் மந்திரம் என்று இதைச் சொல்லலாம். ஓம் என அழுத்தம் திருத்தமாக மனதை ஒருநிலைப்படுத்தி சொல்லிப் பாருங்கள். அடி வயிறு வரை மூச்சுக்காற்று சென்று திரும்பவும் வெளிவருவது போல் இருக்கும். எனவே மந்திரங்களின் முன்னால், ஓம் என்று சேர்த்துக் கொள்கிறார்கள். இதைச் சொல்வதால் ஆயுள் விருத்தியடையும். மனம் கட்டுப்படும். அனைத்தும் நானே என்று இறைவன் (முருகன்) சொல்கிறான். அந்த பொருளுக்குரிய பதமும் ஓம் என்பது தான், ஓம் என்ற மந்திரத்தை தீட்சை பெற்றவர்களே சொல்ல வேண்டும் என்ற கருத்தும் இருக்கிறது.