நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 31ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது. கடலூர் அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் செடல் திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று 28ம் தேதி காலை 8:00 ணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை 3:00 மணிக்கு சாகை வார்த்தல் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு அம்மன் குதிரை வாகனத்தின் வீதியுலா நடைபெற்றது. நாளை 30ம் தேதி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 9:00 மணிக்கு பட்டு சாத்தும் வைபவத்திற்காக அம்மன் வீதி உலா நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து இரவு அம்மன் பூ பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. நாளை மறுநாள் 31ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து 9:00 மணி முதல் செடல் திருவிழா நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு திருத்தேரில் அம்மன் வீதி உலாவும், மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.