ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே பால்கோவா தான் நினைவிற்கு வரும். பசுக்கள் நிறைந்த பகுதி என்பதால் இங்கு அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. திருப்பாவையில், வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் என்று பாடுகிறாள் ஆண்டாள். அதாவது, குடங்களை வைக்க வைக்க பால் நிறையும் அளவிற்கு பசுக்கள் அதிகமாக வாழும் பகுதி என்று இதற்கு பொருள். அவள் இத்தலத்தை கோகுலமாக எண்ணி வாழ்ந்ததால் பெருமாள், இப்பகுதியை பசுக்கள் நிறைந்த பகுதியாக மாற்றி அருளினார். இன்றும் இங்கு பசுக்கள் சுரக்கும் பாலிற்கு தனி சுவை இருக்கிறது. பால்கோவாவும் புகழ் பெற்று விட்டது.