சுக்கிரனை ஆட்சி நாயனாகக் கொண்டதுலாம் ராசி அன்பர்களே!
சூரியன்,கேது, குரு மாதம் முழுவதும் நன்மை தருவர்.ஆக. 24 வரை சுக்கிரன் சாதக பலனை கொடுப்பார். அதன்பின் அவர் வக்கிரம் அடைவதால் நன்மை குறையும். புதன் தற்போது 11-ம் இடத்தில் இருந்து நன்மை தந்து கொண்டிருக்கிறார்.அவர் ஆகஸ்ட் 21ல் கன்னி ராசிக்கு செல்கிறார். இது சிறப்பானது அல்ல. ஆனால், செப். 16 முதல் வக்கிரம் அடைந்து சிம்ம ராசிக்கு செல்வதால் அவர் 11-ம் இடத்திற்குரிய நற்பலனை தருவார். குடும்பத்தில் குதுõகலம் ஏற்படும். மாதத் தொடக்கத்தில் பண வரவு நன்றாக இருக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். பெண்களின் ஆதரவு உண்டு.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் முன்னேற்றம் காண்பர். லாபம் அதிகரிக்கும். நிறுவனத்தை விரிவுபடுத்துவர். அரசிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ஆக. 20,21,22, செப். 16,17ல் பணம் கிடைக்கும்.
பணியாளர்கள் முன்னேற்றம் அடைவர். வேலைப்பளு இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடை ஏதும் இல்லை.
கலைஞர்கள் புகழ், பாராட்டு பெறுவர்.
மாணவர்களுக்கு இருந்த தொய்வு நிலை மாறும். சிரத்தை எடுத்து படித்தால் மதிப்பெண் உயரும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் திட்டம் தள்ளிப் போகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்
பெண்கள்- வளர்ச்சி அடைவர். குடும்பம் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம். செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு.