பதிவு செய்த நாள்
17
ஆக
2015
03:08
செவ்வாயை ஆட்சி நாயகனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
இம்மாதம் புதன் இடம் மாறினாலும் தொடர்ந்து நன்மை தருவார். சுக்கிரன் ஆக. 24க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். அதோடு சூரியன், ராகுவின் நற்பலன்களும் தொடரும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் பாதகம் இல்லை. தனம், மனம் நிறைவாக இருக்கும். நினைத்தது கைகூடும். செல்வாக்கு சிறக்கும்.குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். பெண்களால் பொருள் சேரும். சொந்த பந்தங்கள் மூலம் பொருட்கள் வரும். அவர்கள் உதவிகரமாக இருப்பர்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்வர். போட்டியாளர்களின் இடையூறு இடம் தெரியாமல் போய்விடும். ஆக. 21ம் தேதிக்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
பணியாளர்கள் வேலையில் திருப்தி காண்பர்.
கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்து வந்த தொல்லை மறையும்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்கும். செல்வாக்கு பெருகும்.
மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். போட்டிகளில் வெற்றி கிட்டும்.
விவசாயிகள் போதிய மகசூல் பெறுவர். அதிக உழைப்பை சிந்த வேண்டியது இருக்கும். கால்நடை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிபோகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெற்று மகிழ்ச்சியடைவர். புத்தாடை, நகை வாங்கலாம். விருந்து, விழா என சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். உடல்நலத்தில் செவ்வாயால் மருத்துவச்செலவு வரலாம். உடல்நிலை தொடர்பாக பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
நல்ல நாள்: ஆக. 18,19, 20, 21, 22, 23, 24, 27, 28 செப். 5, 6, 11, 12, 13, 14, 15, 16, 17.
கவன நாள்: செப். 7,8 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: சிவப்பு, பச்சை .
பரிகாரம்: தினமும் முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஏழைகளுக்கு சிவப்பு நிற ஆடை தானம் செய்யலாம். காளி வழிபாடு காலத்தை உங்களுக்கு சாதகமாக்கும்.