புதுச்சேரி:கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, புதுச்சேரியில் பொம்மைகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.கிருஷ்ண ஜெயந்தி விழா வரும் 5ம் தேதி நடப்பதை முன்னிட்டு, சேலத்தில் செய்யப்பட்ட குழந்தை வடிவிலான கிருஷ்ணன் பொம்மைகள், புதுச்சேரி பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பிளாட்பாரத்தில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. சிறியதாகவும், பெரியதாகவும் பொம்மைகள் கிடைக்கின்றன. கிருஷ்ணன் புல்லாங்குழல் வைத்திருப்பதும், கன்று குட்டியிடம் விளையாடுவது போன்றும், வெண்ணை திருடி சாப்பிடுவது போலவும் தவழ்ந்து வரும் குழந்தைப் போலவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இதன் விலை ரூ. 300 லிருந்து, 1400 வரை விற்கப்படுகிறது.