பதிவு செய்த நாள்
01
செப்
2015
11:09
ெசன்ட் நகர்: பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவின் மூன்றாம் நாளில், பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மனம் உருகி பிரார்த்தனை செய்தனர்.
3ம் நாள் விழாவில்..: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் திருவிழா நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று, தேவ அழைத்தல் விழாவாக சிறப்பிக்கப்பட்டது. அதிகாலை 5:30, 6:30 மற்றும் முற்பகல் 11:00 மணியளவில் தமிழிலும், காலை, 7:00 மணிக்கு ஆங்கிலத்திலும் திருப்பலி நடந்தது. மாலை 5:30 மணிக்கு, ஜெபமாலை, நவநாள் ஜெபம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, தரமணி பங்கு தந்தை, போஸ்கோ தலைமையில், இறை ஊழியத்தில் கத்தோலிக்க அர்ப்பணம் என்ற தலைப்பில், கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. பக்தி பாடல்கள், ஜெபத்துடன் திருப்பலி துவக்கப்பட்டது. பங்கு தந்தை, போஸ்கோ பிராத்தனை செய்தார். அதை தொடர்ந்து, கடற்கரை சாலையில், மாதா தேர்பவனி நடைபெற்றது. வெள்ளவேடு, இளம்குரு மடத்தை சேர்ந்தவர்கள், நேற்றைய திருவிழாவை முன்னின்று நடத்தினர். திருவிழாவிற்கு வந்த பக்தர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி உருக்கமாக பிரார்த்தனை செய்தனர். அன்னை மரியாள் சதுக்கத்தை, பக்தர்கள் பார்வையிட்டனர். தேர்பவனியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று...: இன்று காலை, 5:30, 6:30 மற்றும் 11:00 மணிக்கு, தமிழில் திருப்பலி நடைபெறும். காலை, 7:30 மணிக்கு, ஆங்கிலத்தில் திருப்பலி நடைபெறும். மாலை 5:30 மணிக்கு, ஜெபமாலை, நவநாள் ஜெபம், அதை தொடர்ந்து தமிழில், கூட்டுத்திருப்பலி நடைபெறும்.