உளுந்தூர்பேட்டை: மூலசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீகாளியம்மன் கோவில் உற்சவ பெருவிழா நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா மூலசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீகாளியம்மன் கோவிலில், உற்சவ பெருவிழா நடந்தது. அதனையொட்டி கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. கடந்த 31ம் தேதி ஸ்ரீகாளியம்மன் சுவாமி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளிதெய்வானை முருகன், ஸ்ரீஐயனார், ஸ்ரீமாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபி ஷேக ஆராதனைகள் நடந்தது. மதியம் 3 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. தொடர்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் ஒலையனுõரில் இருந்து புறப்பட்டு, மூலசமுத்திரம் கிராமத்திற்கு வந்து பொதுமக்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று காலை 8:00 மணிக்கு சுவாமி உற்சவ விழா நடந்தது. இதில் மூலசமுத்திரம், பு.கொணலவாடி, ஒலையனுõர், எம்.எஸ்.தக்கா, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.