சக்தி விநாயகர் கோவிலில் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2015 10:09
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் சக்தி விநாயகர் கோவிலில் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்தனர். செஞ்சி சிறுகடம்பூர் சக்தி விநாயகர் கோவிலில் அங்காரக மகா சங்கடஹரசதுத்தி விழா நடந்தது. இதை முன்னிட்டு சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், அருகம்புல் மாலை அணிவித்தனர். மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை சவுந்தர்ராஜன் அர்ச்சகர் செய்தார். இதேபோல் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை அருட்பெரும் ஜோதி குருக்கள் பூஜைகளை செய்தனர்.