பதிவு செய்த நாள்
07
அக்
2015
11:10
சென்னை: சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள, நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு, ஒரு கோடி ரூபாய் செலவில், புதிய ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் பகுதியில், புகழ்பெற்ற நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. பல்லவர் காலத்தை சேர்ந்த இந்தக் கோவிலுக்கு, ராஜகோபுரம் கட்ட, பொதுமக்களும், பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தொல்லியல் துறை ஆலோசனைப்படி, கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட, அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. ஒரு கோடி ரூபாய் செலவில், 18 அடி அகலம், 27 அடி நீளம், 62 அடி உயரத்திற்கு, ஐந்து நிலைகளை உடைய ராஜகோபுரம் கட்டும் பணி, தற்போது நடந்து வருகிறது. இந்தப் பணி, 2016, செப்டம்பரில் நிறைவடையும் என, அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.