பதிவு செய்த நாள்
17
நவ
2015
02:11
யாருக்கும் அஞ்சாத மனம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
சுக்கிரனால் நற்பலன் தொடரும். டிச. 1 வரை புதன் நற்பலன் கொடுப்பார். பொருளாதார வளம் மேம்படும். சமூக மதிப்பு கூடும். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். மாத முற்பகுதியில் வீட்டுத்தேவை அனைத்தும் பூர்த்தியாகும். அனாவசிய செலவை குறைக்கவும். நவ. 30 க்கு பிறகு தம்பதியிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேதுவால் கண் நோய் வரலாம். மருத்துவ செலவும் உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் மாத முற்பகுதியில் அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
பணியாளர்களுக்கு பணிச்சுமை குறையும். கோரிக்கை எளிதில் நிறைவேறும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. நவ. 26,27ம் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரனால் பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்குப் பதவி உயர்வும் கிடைக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். வாழ்க்கை வசதி பெருகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம்.
மாணவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வர். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு துணை நிற்கும்.
விவசாயிகள் சற்று அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் உயரும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் முன்னேற்ற பலன் காண்பர். குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். நவம்பர் 19,20 ல் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவர். ஆடை, அணிகலன் வாங்குவர்.
நல்ல நாள்: நவ. 17,18,19,20, 26, 27, 28, 29, டிச. 2, 3, 4,7, 8, 9,14,15,16
கவன நாள்: நவ. 21, 22 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 6, 8
நிறம்: வெள்ளை, பச்சை
பரிகாரம்: சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். துர்க்கை வழிபாடு, ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.