கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) சிறப்பான மாதம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2015 02:11
பாச உணர்வுடன் பழகி மகிழும் கன்னி ராசி அன்பர்களே!
சுக்கிரனும், சனியும் நன்மை தர காத்திருக்கின்றனர். டிச.1 முதல் புதன் சாதகமான இடத்திற்கு வருகிறார். சூரியன் மாதம் முழுவதும் நன்மை தருவார். எல்லா விதத்திலும் சிறப்பான மாதமாக அமையும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். பொன், பொருள் சேரும். விருந்து, விழா என அடிக்கடி சென்று மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சி இனிதாக நடந்தேறும். தேவையான சகல வசதியும் கிடைக்கும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். டிச. 5,6ம் தேதிகளில் சகோதர வகையில் நன்மை கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.
புதிய தொழில் முயற்சியும் வெற்றி பெறும். நவ. 30க்கு பிறகு கூடுதல் வருமானம் கிடைக்கும். நவ. 19,20 ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். மாத பிற்பகுதியில் அரசின் சலுகை, வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். அதிகாரிகளின் ஆலோசனை மூலம் நன்மை உண்டாகும். கோரிக்கை எளிதில் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கலைஞர்கள் உற்சாகமான பலனைக் காண்பர். நவ. 30க்கு பிறகு சமூக மதிப்பு கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
அரசியல் வாதிகள் சிறப்பான நிலை பெறுவர்.
மாணவர்கள் முன்னேற்றம் அடைவர். நவ.30க்கு பிறகு சிறப்பான வளர்ச்சியைக் காண்பர்.
விவசாயிகள் மஞ்சள், கேழ்வரகு, சோளம், பயறு வகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானம் காண்பர்.
பெண்கள் குடும்பத்தில் குதூகலம் அடைவர். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வர். குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும்.
நவ. 21,22 சிறப்பான நாட்களாக அமையும். டிசம்பர் 10,11 ல் பிறந்த வீட்டுச் சீதனம் கிடைக்கப் பெறுவர்.