சபரிமலை: சபரிமலையில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. மாலையில் சன்னிதானம் கற்பூர தீப ஒளியில் ஜொலித்தது.கார்த்திகை தீப விழாவையொட்டி சபரி மலையில் நேற்று மாலை 6.30-க்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது சன்னிதானத்தின் சுற்றுப்புறங்களில் கற்பூர தீபம் ஏற்றப்பட்டது. கற்பூர தீப ஒளியில் சபரிமலை ஜொலித்த போது பக்தர்கள் சரணகோஷம் எழுப்பினர். 18-ம் படியின் இருபுறமும் உள்ள கோபுர விளக்குகளிலும் தீபம் ஏற்பட்டது. தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தொடங்கி வைத்தார்.