பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
03:04
எதிர்பார்ப்பு எளிதில் ஈடேறும். இந்த மாதம் அதிக நன்மையை எதிர்பார்க்கலாம். புதன், செவ்வாய், சனி, சுக்கிரனும் அனுகூலபலன் அளிப்பர். புதனால் தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். முயற்சியில் எந்தவிதமான பின்னடைவும் இருக்காது. பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். உறவினர்கள் வருகையால் நன்மை கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் கருத்து வேறுபாடு உருவாகி மறையும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதன், சுக்கிரன் சாதகமான நிலையில் இருப்பதால் தொழிலில் நல்ல வளர்ச்சி காணலாம். பணத்திற்காக நீங்கள் கையேந்தி நிற்கும் நிலை மாறி பிறரை உங்களை அண்டி நிற்கும் நிலை உருவாகும். வீண் செலவு இருக்காது. ஏப். 14 , மே10,11ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும். ஏப். 22,23 சிறப்பான நாட்களாக அமையும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
கலைஞர்கள் மதிப்பு, மரியாதை காண்பர். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். புகழ், பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு. மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். விவசாயிகள் கரும்பு எள் கொள்ளு மற்றும் பழவகைகள் கிழங்கு வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கை கூடும்
பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். மே 3,4 ல் புத்தாடை நகைகள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்க பெறலாம்.
நல்ல நாள்: ஏப். 14,15,16,22,23,24,25,26,29,30, மே3,4,10,11,12,13
கவன நாள்: ஏப்ரல்17,18 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,3,7 நிறம்: பச்சை, சிவப்பு,வெள்ளை
வழிபாடு: தினமும் காலையில் எழுந்து சூரிய தரிசனம் செய்யுங்கள். துர்க்கை வழிபாடு துணை நிற்கும். வியாழக்கிழமை தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து கொண்டை கடலை தானம் செய்வது நல்லது.