பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
03:04
சூரியன், குருவால் நன்மை தொடர்ந்து கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். சுக்கிரன் ஏப். 26ல் இடம் மாறினாலும் நன்மை தருவார். பொருளாதார வளம் கூடும். செல்வாக்கு அதிகரிக்கும். சமூக மதிப்பு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். ஏப். 25க்கு பிறகு பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். மே 1,2 ல் பெண்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். மே 5,6,7 ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். செவ்வாயால் உஷ்ணம், தோல் தொடர்பான நோய் வரலாம்.
தொழில், வியாபாரம் சிறப்படையும். லாபம் அமோகமாக இருக்கும். மாத முற்பகுதியில் வியாபாரிகளுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். சனி பகவானால் பெண்கள் வகையில் இடையூறு வரலாம். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பகைவர் தொல்லை வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஏப். 15,16 மே 12,13 ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்களுக்கு நற்பெயர் உண்டாகும். ஏப். 25க்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று உயர்வுநிலை அடைவர். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல் வாதிகள் முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் குருவால் தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பர். ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். விவசாயிகள் நெல் கோதுமை சோளம் கேழ்வரகு பயறு வகைகள் பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தாமதமாகும். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி கைகூடும். சகோதரர்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.
நல்ல நாள்: ஏப். 15,16,17,18,24,25,26,27,28, மே 1,2,5,6,7,12,13
கவனநாள்: ஏப். 19,20,21 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்- 3,7 அதிர்ஷ்ட நிறம்: செந்துõரம், வெள்ளை
வழிபாடு: பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கை, பைரவருக்கு பூஜை செய்யலாம். முருகன் கோவிலுக்கும் சென்று வாருங்கள். புதன்கிழமை குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்.