காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பவான் கோவில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காரைக்கால் மாவட்ட திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோவலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் துர்முக வருஷ பிரமோற்சவ விழா கோடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக 2ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், 3ம் தேதி அங்குரார்பணம் நடந்தது.
தர்பாரண்யேஸ்வரர், அம்பாள் மற்றும் சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை 9:00 மணிக்கு ரிஷப கொடியேற்றமும், பஞ்சமர்த்தி வீதி உலா நடந்தது. 19ம் தேதி சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் சுவாமி விதி உலா நடக்கிறது. 20ம் தேதி தெப்ப உற்சவமும், 22ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னிர்செல்வம் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.