விழுப்புரம்: அனுமந்தபுரம் கிராமத்தில் சாகை வார்த்தல் விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த அனுமந்தபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை மாத சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 2ம் தேதி காலை 8:00 மணிக்கு ஐய்யனாரப்பன் சுவாமி கரிகோலம் நிகழ்ச்சியும், விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது. பின், நேற்று 3ம் தேதி காலை 11:00 மணிக்கு பூங்கரக வீதியுலா மற்றும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, மதியம் 2:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. தொடர்ந்து, இன்று(4ம் தேதி) ஐய்யனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா நடக்கிறது.