பதிவு செய்த நாள்
30
மே
2016
11:05
குன்னுார்: குன்னுார் வெலிங்டன் சின்ன வண்டிச்சோலை பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், 111வது ஆண்டு கரக உற்சவ விழா நடந்தது. இந்த விழாவில், கொடியேற்றம், முகூர்த்த வளையல் அணிவித்தல், அபிஷேக ஆராதனை, காப்பு கட்டுதல், கங்கைக்கு புறப்படுதல், திருக்கரக ஜோடனை உற்சவம், ஆகியவை நடந்தன. இதில், முக்கிய நிகழ்ச்சியாக, 15 நாட்களாக விரதம் இருந்து வரும் கன்னி பெண்கள், சிறுமியர் பாரம்பரிய முறைப்படி மஞ்சள் பூசியபடி விழாவில் பங்கேற்றனர். இவர்களுக்கு நடந்த, சாட்டையடி நிகழ்ச்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. குறிப்பாக, வறட்சியின் பிடியில் உள்ள குன்னுாரில் மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. கரக உற்சவ விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், சின்ன வண்டிச்சோலை, மலையப்பன் காட்டேஜ், கூர்காகேம்ப், பேரக்ஸ், டைரிபார்ம், எம்.ஈ.எஸ்., குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.