கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் சிறப்பாக அலங்காரம் செய்து கொண்டாடப்பட்டது. இதற்காக கோயில் நுழைவு வாசல் மற்றும் கோயிலின் உள்பகுதி முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
கோயிலின் கிழக்கு நுழைவு வாசலில் நூற்றுக்கணக்கான திருவிளக்குகள் ஏற்றப்பட்டு பூஜை செய்யப்பட்டது. மேலும் கோயிலின் பிரதான விளக்கில் தீபம் ஏற்றப்பட்டதை காண கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.