அவலுார்பேட்டை: வளத்தியில் கோகுலாஷ்டமி விழா நடந்தது. மேல்மலையனுார் தாலுகா வளத்தி கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாரதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ராதா ருக்மணி சமேத கிருஷ்ண பெருமான் சுவாமி வீதி உலா நடந்தது. பிற்பகலில் அன்னதானமும் பின்னர் உரியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழா குழுவினர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் திரளாக கிராம மக்கள் கலந்து கொண்டனர்.