நாகர்கோவில் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தில் அழகிய நம்பி கோவில் உள்ளது. இங்கு குழந்தைக் கண்ணன் துாங்கிக்கொண்டிருப்பதாக ஐதீகம். அவரது துாக்கம் கலையாமல் இருக்கும் பொருட்டு நாதஸ்வரம், தவில் போன்ற வாத்தியங்கள் இங்கே இசைக்கப்படுவது இல்லை. பூஜையின்போது புல்லாங்குழல் இசை மட்டும் ஒலிக்கப்படுகிறது.