பதிவு செய்த நாள்
26
ஆக
2016
11:08
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில், கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடந்தது. திருமலை ஏழுமலையான் கோவில் தங்கவாசல் அருகே, நேற்றிரவு, 8:30 மணி முதல், 10:30 மணி வரை, ஸ்ரீதேவி பூதேவி மலையப்ப சுவாமியை எழுந்தருள செய்து, உற்சவமூர்த்திகளுக்கு, சிறப்பு ஆஸ்தானம் நடந்தது. திருமலையில், கோகர்பம் நீர்தேக்கம் அருகேயுள்ள காளிங்கநர்த்தன கிருஷ்ணர் சிலைக்கு, தேவஸ்தானம் சார்பில், அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. அதேபோல், திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசாலையில் உள்ள கிருஷ்ணர் கோவில் மற்றும் இஸ்கான் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் கொண்டாடப்பட்டது.
அலைக்கழிப்பு : ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள, 250 தபால் நிலையங்களில், தினமும், 5,000 ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பக்தர்கள், டிக்கெட் வாங்க சென்றால், ’சர்வர்’ பழுது உள்ளிட்ட காரணங்களை கூறி, ஊழியர்கள் அலைக்கழிக்கின்றனர். இதனால், தபால் நிலையங்களில், தரிசன டிக்கெட் பெறுவோர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.