உலகளந்த பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2016 11:08
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், உலகளந்த பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, காலை 10:00 மணிக்கு, வேணுகோபாலன் சன்னிதி மற்றும் மூலவர் சன்னிதியில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள்‚ கண்ணன் சிறப்பு அலங்காரத்துடன், மூலஸ்தானத்தில் இருந்து புறப் பாடாகி‚ கொடிமண்டபத்தின் முன்பாக எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள், வேதமந்திரம் முழங்கி, ஆலிலை கண்ணனுக்கு பால்புகட்டி, கிருஷ்ணர் பிறப்பு வைபவ நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை, மூலஸ்தானத்தில் இருந்து சுவாமி புறப்பாடாகி, சன்னிதி வீதியில் உள்ள மண்டபங்களில் உறியடி நிகழ்ச்சி நடக்கிறது.