பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், நாளை அமாவாசையை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அ ருள்பாலிக்கிறார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், நாளை (1ம் தேதி) அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாளுக்கு காலை 6:30 மணிக்கு சுப்ரபாதம், 7:30 மணிக்கு நித்தியபடி பூஜை நடக்கிறது. தொடர்ந்து, மூலவர் சரநாராயண பெருமாள் காலிங்க நர்த்தனராக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதியம் 1:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, இரவு 9:00 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கிறது.