Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ... பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி: 50 பேர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி: 50 பேர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

28 செப்
2016
10:09

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாகப்பட்டணம் மாவட்டத்தை சேர்ந்த, 50 பேர், உழவாரப்பணியில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், 27 ஏக்கர் கொண்டது. ஒன்பது கோபுரங்கள், ஆயிரங்கால் மண்டபம் உட்பட, 75 க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான சன்னதிகள் உள்ளன. இங்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் போடும் குப்பை, பிளாஸ்டிக் கழிவு, கோவில் வளாகத்தில் மரங்களில் உள்ள இலைகள் கீழே உதிர்வதால் ஏற்படும் குப்பை ஆகியவற்றை, தினசரி கோவில் தற்காலிக ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். ஆனால் குறைந்த அளவே ஊழியர்கள் உள்ளதால், சுத்தப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், அவ்வப்போது பல்வேறு பகுதிகளிலிருந்து உழவாரப்பணிகளை மேற்கொள்ள பக்தர்கள் வருகின்றனர். நேற்று நாகப்பட்டணத்தில் இருந்து, அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை சார்பில் வந்திருந்த, 50 பேர் கொண்ட குழுவினர், கோவில் வளாகத்தில் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். இவர்கள் கோவில் வளாகத்தில் குப்பைகளை அகற்றி, நந்தவன பராமரிப்பு பணிகளை செய்தனர். மேலும் இவர்கள், இந்த கோவிலில் ஆண்டுக்கு, இரு முறை உழவாரப்பணி மேற்கொள்ள உள்ளதாகவும், கார்த்திகை தீப திருவிழா முடிந்தவுடன், மலையில் உள்ள சுற்றுச்சூழலை பாதிக்கும் கழிவு, பிளாஸ்டிக் கழிவு ஆகியவற்றை அகற்ற வர உள்ளதாகவும் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar