பதிவு செய்த நாள்
29
செப்
2016
11:09
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி உற்சவம் அக்.,2 முதல் 10 வரை நடக்கிறது. இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: நவராத்திரி உற்சவ நாட்களில் தினமும் மாலை 6:00 மணி முதல் மீனாட்சி அம்மன் மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் இரவு 8:30 மணி வரை நடக்கும். பூஜை காலங்களில் பக்தர்களுக்கு தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்பட மாட்டாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு மட்டுமே தேங்காய் உடைப்பு, அர்ச்சனைகள் செய்யப்படும்.நவராத்திரி அம்மன் அலங்காரம்: அக்.,2 ஸ்ரீராஜராஜேஸ்வரி, அக்.,3 குமரகுருபரருக்கு முத்து மாலை வழங்குதல், அக்.,4 முருகனுக்கு வேல் வழங்குதல், அக்.,5 தபசுக்காட்சி, அக்.,6 ராஜமாதங்கி, அக்.,7 ஊஞ்சல், அக்.,8 திக்குவிஜயம், அக்.,9 மகிஷாசுரமர்த்தினி, அக்.,10 சிவபூஜை அலங்காரம் நடக்கிறது. சாந்தாபிஷேகம், அன்னாபிஷேகம் அக்.,15ல் நடக்கிறது. உற்சவ நாட்களில் கோயிலில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகியவை நடக்காது.