பதிவு செய்த நாள்
21
அக்
2016
10:10
சபரிமலை: சபரிமலையில் அஷ்ட பந்தன கலசம் நிறைவு பெற்றது. இனி, கார்த்திகை ௧ல் தான் நெய் அபிஷேகம் நடக்கும். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை, அக்.,16- மாலை திறக்கப்பட்டது. அக்.,17 முதல் 19 வரை நெய்அபிஷேகம், வழக்கமான பூஜைகள் நடந்தன. ஐயப்பன், மாளிகைப்புறம் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பீடத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளியை போக்க வேண்டும் என தேவ பிரசனத்தில் கூறப்பட்டதால், அஷ்டபந்தன கலசம் நடத்த முடிவு செய்யப்பட்டது; இதற்காக மருந்து கூட்டு தயாரிக்கப்பட்டது. இதை பீடத்தில் அமைப்பதற்காக நேற்று முன்தினம் இரவு ௩:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம் நடந்தது. பின், அஷ்டபந்தன கலசம் பூஜிக்கப்பட்டு தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி, பூஜாரிகள் கோயிலை வலம் வந்தனர்; தொடர்ந்து அஷ்டபந்தன கலசம் நடந்தது. அஷ்ட பந்தனத்தை முன்னிட்டு நேற்று நெய்அபிஷேகம் நடக்கவில்லை; இன்றும் நெய் அபிஷேகம் கிடையாது. அக்., 29ல் சித்திரை ஆட்ட திருநாள் தினம் வருகிறது. இனி, கார்த்திகை ௧ல் (நவ.,16) நெய் அபிஷேகம் நடக்கும்.