பதிவு செய்த நாள்
27
அக்
2016
11:10
குருசாமிபாளையம்: ஈசான லிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த கும்பாபி?ஷக விழா கோலாகலமாக நடந்தது. நாமக்கல் மாவட்டம், குருசாமிபாளையம் அடுத்த குருக்கபுரத்தில், ஈசான லிங்கேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி முடிந்ததை அடுத்து, நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், காலை, 10:00 மணிக்கு, தீர்த்தக்குடம், முளைப்பாரியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, முதல்கால வேள்வி, எண்வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, காப்பணிவித்தல், காலை, 5:00 மணிக்கு, இரண்டாம் காலவேள்வி, காலை, 6:15 மணிக்கு, திருக்குடங்கள் புறப்படுதல், 6:30 மணிக்கு, விமானங்களுக்கு கும்பாபிஷேகமும், 6:45 மணிக்கு, மூல மூர்த்திக்களுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, சுவாமி தரிசனம், சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.