Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மை வேண்டி பிரத்யங்கிரா ... கல்வெட்டுகள் மீது சூடம், விளக்கேற்றுவதால் மறையும் தமிழர் வரலாறு கல்வெட்டுகள் மீது சூடம், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலைக்கு வருபவரை தடுக்க கூடாது! ஸ்பாட் முன்பதிவு ரத்து செய்ய எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலைக்கு வருபவரை தடுக்க கூடாது! ஸ்பாட் முன்பதிவு ரத்து செய்ய எதிர்ப்பு

பதிவு செய்த நாள்

08 மே
2024
10:05

சென்னை : சபரிமலையில் பக்தர்க:ள் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வலியுறுத்தி உள்ளது.

அதன் தலைவர் ஜெயச்சந்திரன், பொதுச்செயலர் ஜெயராம் அறிக்கை: திருவிதாங்கூர் தேவசம் போர்டு, வரும் மண்டல காலத்தில் இருந்து, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு நாளைக்கு 80,000 பேர் மட்டும், முன்கூட்டியே பதிவு செய்யும் முறையில் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது. பதிவு செய்வோர் மட்டும் அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாது என்று உத்தரவிட, திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு, எந்த தார்மீக உரிமையும் கிடையாது. அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு, தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தான், அதன் தலையாய பணி. பக்தர்களை கட்டுப்படுத்தும் போக்கை கைவிட்டு, வரக்கூடிய கூட்டத்தை எப்படி சமாளிக்கலாம் என, தேவசம் போர்டும், கேரள அரசும் யோசிக்க வேண்டும். சன்னிதானத்தை சுற்றி, 500 பேர் அமரக்கூடிய காத்திருப்பு கூடங்களை உடனடியாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு கூடங்களிலும், கழிப்பறைகள், மின் விசிறிகள், குடிநீர், டிவி வசதி ஏற்படுத்த வேண்டும். பம்பையிலிருந்து நீலிமலை ஏறி, காத்திருப்பு கூடங்கள் வரும் வரை, பக்தர்களுக்கு எந்த தடையும் இருக்கக் கூடாது. பம்பை மலையேற்றத்தில், பக்தர்களை மணிக்கணக்கில் தடுத்து நிறுத்தி, அவதிக்குள்ளாக்கும் நிலைமை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். பாதயாத்திரையாக சொந்த ஊர்களில் இருந்தும், பெருவழிப்பாதை வழியாகவும் வரும் பக்தர்களுக்கு, கரிமலை உச்சியில் சிறப்பு அனுமதி சீட்டு வழங்கி, அவர்களை நேரடியாக பதினெட்டாம் படி ஏறி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். இப்படி ஆக்கப்பூர்வமான பணிகளை செய்தால், ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். பக்தர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முடிவிலிருந்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு பின்வாங்க வேண்டும். இல்லையென்றால், பக்தர்களை திரட்டி அறநெறி வழியிலான போராட்டங்களில், சபரிமலை அய்யப்பா சேவா சமாஜம் ஈடுபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 25ல் ... மேலும்
 
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
அவிநாசி; டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச வேலை தடுப்பு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar