கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) கார் வாங்கும் யோகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2016 04:11
கண்ணியம் மிக்க கன்னி ராசி அன்பர்களே!
புதனை ஆட்சி கிரகமாகக் கொண்ட உங்களுக்கு, அவரால் நவ.25ல் இருந்து நன்மை கிடைக்கும். செவ்வாய் டிச.6-ல் இருந்து நற்பலனை கொடுப் பார். கேது, சனி ஆகியோரின் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். சூரியன், சுக்கிரன் ஆகியோரின் பக்க பலத்தோடு இம்மாதம் சிறப்பாக நடைபெறும். இதனால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். நீங்கள் எடுத்த செயல்களில் எந் தவிதமான பின்னடைவும் இல்லாமல் வெற்றி மேல் வெற்றி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன்-, மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். நவ.24,25ல் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். நவ.19,20-ல் உறவினர்கள் வரு கையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் டிச.1,2,3ல் அவர்கள் வகையில் இருந்து சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். டிச.4-க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். பொருள் லாபம் அதிகரிக்கும். பக்தி உயர்வு மேம்படும். டிச.6-க்கு பிறகு புதிய வீடு, கார் வாங்க யோகம் கூடி வரும்.
தொழில், வியாபாரம் சிறப்படையும். கூடுதல் வருவாயை காணலாம். நவ. 21,22,23,26,27,28ல் பணப்பெட்டி உங்கள் பொறுப்பில் இருக்க வேண்டும். டிச.6,7-ல் எதிர்பாராத வகையில் லாபம் கொட்டும். நவ.25-வரை அரசு வகையில் தொல்லைகள் வரலாம். எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். போட்டியாளர்களால் சிரமம் இருந்தாலும் சமாளித்து விடலாம். அதன் பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும்.
பணியாளர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். சுக்கிரனால் அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறை வேறும். நவ.17,18, டிச.14,15-ல் எதிர்பாராத நன்மை நடக்கும். நவ.25-க்கு பிறகு நல்ல முன்னேற்றமும், எதிர்பாராத சலுகையும் பெறலாம். ÷ மல்அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவர். எந்தப்பணியில் இருந்தாலும் முன்னேற்றத்தை தடுக்க இயலாது.
கலைஞர்கள் உற்சாகமான பலனைக் காண்பர். புகழ், பாராட்டு கிடைக்கும். அரசு வகையில் நன்மை உண்டு. அரசியல்வாதிகள் தலைமையிடம் அனுசரித்து போவது நல்லது. டிச.6-க்கு பிறகு புதிய பதவி தேடி வரும். சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
மாணவர்களின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. நவ.25-க்கு பிறகு புதனின் அருளால் கூடுதல் பலன் காணலாம். பள்ளியில் நற்பெயர் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்க பெறலாம்.
விவசாயிகள் உழைப்புக்கு தகுந்த வருமானம் காண்பர். பயறு வகைகள் சிறப்பான மகசூல் தரும். கால்நடை செல்வம் பெருகும். டிச.6-க்கு பிறகு புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவர். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப் பர். நவ.29,30ல் புத்தாடை, நகை வாங்கி மகிழ்ச்சி அடைவர். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரும். டிச.8.9-ல் சகோதரிகள் மூலம் பணம் கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் வந்து சேரும். கோரிக்கைகள் நிறைவேறும். டிச.6-க்கு பிறகு உயர்பதவி தேடி வரும். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வர வாய்ப்புண்டு. தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். உடல் நலம் சிறப்படையும். கண்வலி பூரண குணமடையும். ஒருவித பயம் ஆட்கொள்ளும் வயிறு தொடர்பான உபாதை வரலாம். நவ.16, டிச.4,5,12,13ல் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.
நல்ல நாள்: நவ.17,18,19,20,24,25,29,30 டிச. 6,7,14,15
கவன நாள்: டிச.8,9,10- சந்திராஷ்டமம். இந்த நாட்களில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். சுபநிகழ்வு குறித்த பேச்சுவார்த்தையைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 3,7,9 நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்: சனிக்கிழமைகளில் கிருஷ்ணரை வழிபட்டு வாருங்கள்.செவ்வாய்க்கிழமை அம்மனை வணங்க வேண்டும். ராகுவுக்கு அர்ச்சனை செய் யுங்கள். இதனால் வாழ்வில் வளம் கிடைக்கும். வியாழக்கிழமை சிவன் கோவிலுக்கு சென்று வர தவறாதீர்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »