ஹரித்துவாரிலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் ஐந்து புண்ணிய சங்கமங்கள் இருக்கின்றன. அலக்நந்தா நதியுடன் பாகீரதி நதி சங்கமமாகும் தேவப்பிரயாகை, தேவப்பிரயாகையும் மந்தாகினியும் சங்கமிக்கும் ருத்ரபிரயாகை, அலக்நந்தாவுடன் பிண்டர் நதி சங்கமிக்கும் கர்ணப் பிரயாகை, கருடகங்கா என்ற தௌலி நதி சேரும் விஷ்ணுப் பிரயாகை, இவற்றுடன் நந்தாகினி நதி சேரும் நந்தப் பிரயாகை என சிறப்பு வாய்ந்த பஞ்ச பிரயாகைகள் உள்ளன. சார்தாம் யாத்திரை மேற்கொள்வோர் இங்கே நீராடிச் செல்வது மரபு. கர்ணன் தவம் செய்த தலம் இது. தனது புண்ணியத்தை கண்ணனுக்கு தானம் செய்த புண்ணியத்தலம். கர்ணப் பிரயாகை நதிக்கரையில் கர்ணனுக்கு ஒரு திருக்கோயில் அமைந்துள்ளது.