ஒவ்வொரு மதத்தினரும் முக்தியைப் பற்றிப் பல விதமாகக் கூறுகின்றனர். உலகாயத மதத்தினர் அழகிய பெண்களை மணந்து இன்புறுதலே முக்தியெனவும், மீமாம்ஸ்கர் யாகாதி கருமங்களைச் செய்து ஸ்வர்க்காதிலோக போகங்களை நுகர்தலே முக்தியெனவும், பவுத்தர்கள் ஐந்து கந்தம் அறக்கெடுதலே முக்தியெனவும், ஜைனர்கள் எண் குணமடைதலே முக்தியெனவும், வைசேடிகர் கல்போல் கிடத்திலே முக்தியெனவும், சாங்கியர் தத்துவங்களைப் பகுத்துணரும் விவேக ஞானமே முக்தியென்றும், அத்வைதிகள் வேதாந்த விசாரத்தால் தோன்றிய ஞானத்தால் மாயைக்கு வேறாகிய பிரம்மரூபமே நான் என்றறிவதே முக்தியெனவும், சித்தாந்த சைவர் சிவனடியைச் சேர்வதே முக்தியெனவும் கூறுகின்றனர்.