பதிவு செய்த நாள்
23
மார்
2017
06:03
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் சம்வஸ்திரா அபிஷேகம் நடந்தது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.இக்கோவில் ராஜகோபுரம் மற்றும் சொர்ணகணபதி,முருகன்,தர்பாரண்யேஸ்வரர்,பிரணாம்பிகை மற்றும் சனி பகவான் சன்னதிகள் புனரமைக்கப்பட்டு கடந்த 2006ம் ஆண்டு சித்திரை மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகம் நடந்த சித்திரை மாத உத்திராட நட்சத்திர நாளில் சம்வஸ்திரா அபிஷேகம் நடத்தப்படுகிறது.11ம் ஆண்டு சம்பவஸ்திரா அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி நேற்று மாலை விக்கேஸ்வர பூஜை,கணபதி ஹோமம், புன்யாவாஜனம், விஷேச கும்பபூஜையும், பூர்ணாஹீதி நடந்தது.யாக பூஜைகள் முடிந்து பூஜைசெய்த கலசங்கள் கோவில் உட்பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.பின் தர்பாரண்யேஸ்வரர், சொர்ணகணபதி, பிரணாம்பிகை,முருகன், சனிஸ்வரபகவானுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாரதனை நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.