Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலசுப்ரமணியர் கோவிலில் நாளை ... அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பக்தர்கள் கடும் வெயிலில் அவதி: குடிநீரும் இல்லை
எழுத்தின் அளவு:
பழநி பக்தர்கள் கடும் வெயிலில் அவதி: குடிநீரும் இல்லை

பதிவு செய்த நாள்

10 ஏப்
2017
12:04

பழநி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழநியில் குவிந்த பக்தர்கள் கிரிவீதி, சன்னிதிவீதி ஒருவழிபாதை தடுப்புகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் குவிந்த பக்தர்கள் இரவு 10 மணிக்குமேல் மலைக்கோயிலுக்கு யானைப் பாதைவழியாக செல்ல அனுமதிக்கவில்லை, தரிசனத்திற்காக பக்தர்கள் வடக்குகிரிவீதி, சன்னதிவீதி தடுப்புகளில் சிக்கிகொண்டு, குழந்தையுடன் அதிகாலை வரை குடிக்கதண்ணீர் வசதி இல்லாமல் சிரமப்பட்டனர். இதேப்போல பகலிலும் தடுப்புகளில் ஒருமணி நேரம் வரை சிறைவைக்கப்பட்ட பக்தர்கள் கிரிவீதி, சன்னிதி வீதியில் குடிநீர் வசதியின்றியும், வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டனர்.

மலைக்கோயிலில் கூட்டநெரிசலை தவிர்க்க தடுப்பு அமைத்துள்ள கோயில்நிர்வாகம், போலீசார் அதில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதி, நிழற்கூரைவசதி செய்துதரவேண்டும். அதற்குபதிலாக குடிநீர், கழிப்பறை வசதியுள்ள குடமுழுக்கு நினைவு அரங்கு, யானைப்பாதை வழிகளில் உள்ள தடுப்புகளில் காத்திருக்க வைக்கலாம். விஸ்வ இந்துபரிசத் நகரசெயலாளர் செந்தில்குமார் கூறுகையில்,"கூட்டநெரிசலை கட்டுபடுத்துகிறோம் என்ற பெயரில் பக்தர்களை மிகவும் துன்புறுத்துகின்றனர். நேற்று சன்னிதி வீதியில் வெயிலில் பக்தர்கள் மயங்கிவிழுந்தனர். அவர்களுக்கு தண்ணீர் கூட இல்லை, வர்த்தகர் தான் உதவி செய்தனர். இப்பிரச்னை தொடர்பாக வர்த்தக சங்கம் சார்பில் கலெக்டர், எஸ்.பி.,யிடம் மனுஅளித்தும் நடவடிக்கை இல்லை,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar