பதிவு செய்த நாள்
10
மே
2017
02:05
பவானி: சங்கமேஸ்வரர் கோவிலில், சித்திரை திருவிழா தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில், சித்திரை திருவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாணத்தை தொடர்ந்து, ஆதிகேசவ பெருமாள்தேரோட்டம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வர சுவாமிக்கு, திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். காலை, 8:30 மணியளவில் தேரோட்டம் நடந்தது. சிவனடியார்கள், பக்தர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். வரும், 12ல் காலை நடராஜருக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் சித்திரை விழா நிறைவடைகிறது.