பதிவு செய்த நாள்
10
மே
2017
02:05
கோத்தகிரி : கோத்தகிரி கட்ட பெட்டு எல்லை மாரியம்மன் கோவில், 45வது ஆண்டு தேர்திருவிழா நடந்து வருகிறது. இதை தொடர்ந்து, நேற்று காலை, 9:00 மணிக்கு அம்மன் திருத்தேர் வீதி உலா நடந்தது. பகல், 1:00 மணிக்கு, பொங்கல் பூஜையும், மாலை, 3:00 மணிக்கு, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, அம்மனை கங்கையில் கரை சேர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. வரும், 15ம் தேதி, மறுபூஜையுடன், விழா நிறைவடைகிறது. * இதே போன்று, கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழாவில், அம் மன் புலி வாகன திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.