பெற்றோர்க்கு சிராத்தம் செய்யும்போது பிள்ளைகள் தனித்தனியே செய்வது சரியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2017 03:05
சாஸ்திரங்களில் தனித்தனியாக செய்ய வேண்டும் என்று எப்போது சொல்கிறது என்றால், சொத்தைப் பிரித்துக் கொண்டிருந்தாலோ, தனித்தனியே சமையல் செய்து வந்தாலோ அப்போது தனியாகத்தான் சிராத்தம் செய்ய வேண்டும். சேர்ந்து செய்யக் கூடாது. சில இடங்களில், தாயார் சொல்வார்... நான் இருக்கும் இடத்தில் சேர்ந்து செய்ங்கோ என்று. அப்போது, அன்னம், பாயஸம் இரண்டும் தனித்தனியாகத்தான் செய்யணும். பிராமணர்களையும் தனித்தனியாகத்தான் சொல்லிச் செய்யணும். அண்ணன் சிராத்தம் செய்யும்போது, தம்பி கையைக் கட்டிக் கொண்டு பின்னால் நிற்பது என்பதெல்லாம் சாஸ்திரப்படி தவறு. ஒரே வீட்டில் எல்லாரும் சேர்ந்து இருந்து, சேர்ந்து சமைத்து சாப்பிட்டால் வேண்டுமானால் அது பொருந்துமே அன்றி, மற்றபடி தனித்தனியாகத்தான் செய்யவேண்டும்.