பதிவு செய்த நாள்
30
மே
2017
11:05
பழநி: கோடை விடுமுறையில் குவிந்த பக்தர்களால், பழநி முருகன்கோயில் உண்டியலில், 26 நாட்களில் ரூ.இரண்டு கோடியே 94 ஆயிரம் வசூலாகியுள்ளது.பழநி மலைக்கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் எண்ணும்பணி நடந்தது. அதில் தங்கம்-1010 கிராமும், வெள்ளி-12,600 கிராமும், அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சிகள்-294, ரொக்கமாக ரூ. இரண்டு கோடியே 94ஆயிரத்து 232 கிடைத்துள்ளது. பக்தர்கள் தங்கம், வெள்ளியில் செய்யப்பட்ட வேல், உருவம், பாதம் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், கோயில் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது. கோடை விடுமுறையில் குவிந்த பக்தர்களால் காணிக்கை அதிகமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.