பதிவு செய்த நாள்
30
மே
2017
11:05
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம், வரும் ஜூன் 1ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, நாளை மாலை, கிராம சாந்தியுடன் துவங்குகிறது. மாலை, 6:00 மணிக்கு நொய்யல் வீதியில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில், அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். நாளை மறுநாள் மாலை, 6:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. திருவிழாவில், 5ம் தேதி மாலை, பஞ்சமூர்த்தி புறப்பாடு, பெருமாள் கருட சேவை புறப்பாடு, 6ம் தேதி காலை மற்றும் மாலை சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை வாகன காட்சி நடக்கும். 7ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு, விஸ்வேஸ்வர சுவாமி, 8ம் தேதி மாலை, 3:00 மணிக்கு வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவில், வரும், 9ம் தேதி மாலை, கருவம் பாளையம் மாகாளியம்மன் கோவிலில் பரிவேட்டை; 10ம் தேதி தெப்போற்சவம், 11ம் தேதி, மகா தரிசனம், 12ம் தேதி காலை மஞ்சள் நீராட்டு விழாவுடன், திருவிழா நிறைவு பெறுகிறது.
கலை நிகழ்ச்சி: தேர்த் திருவிழாவை முன்னிட்டு, வீரராகவப் பெருமாள் கோவில் திடலில், தினமும் மாலை, 6:30 மணிக்கு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஜூன் 1 மற்றும் 2ம் தேதி, தேசமங்கையற்கரசியின் சொற்பொழிவு, 3ம் தேதி, மணிகண்டன் சொற்பொழிவு, 4ம் தேதி, சண்முகவடிவேல் தலைமையில், பட்டிமன்றம், 5ம் தேதி, தங்கவேல் தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. வரும், 6ம் தேதி, திருச்சி விஜயசுந்தரியின் சொற்பொழிவு, 7ம் தேதி, சேலம் தேவி தலைமையில், மகளிர் பட்டிமன்றம், 8ம் தேதி, வாசுகி மனோகரன் தலைமையில், இன்னிசை அரங்கம், 9ம் தேதி, சுமதியின் ஆன்மிக சொற்பொழிவு, 10ம் தேதி, தமிழருவி மணியனின் சொற்பொழிவு நடக்கிறது. கலை நிகழ்ச்சியில், வரும், 11ம் தேதி, அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டத்தின், 63ம் ஆண்டு மாநாடு, 6:30 மணிக்கு, ‘திருவாசகம் எனும் தேன்’ சுந்தரத்தின் சொற்பொழிவு. 12ம் தேதி, தஞ்சை கோவிந்தராஜனின் ‘லயநாத இன்ப இசை’ தவில் கச்சேரி மற்றும் 13ம் தேதி, சிவக்குமாரின், பெரியபுராணம் சொற்பொழிவு நடைபெறும்.