Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுஷ்கோடியில் இடியும் தருவாயில் ... பழநி கோயில் உண்டியலில் 26 நாளில் ரூ.2 கோடி வசூல் பழநி கோயில் உண்டியலில் 26 நாளில் ரூ.2 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடிமக்களை பெருமைப்படுத்தும் புலிகுத்தி நாணயம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
குடிமக்களை பெருமைப்படுத்தும் புலிகுத்தி நாணயம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

30 மே
2017
11:05

ஈரோடு : குடிமக்களை பெருமைப்படுத்தும் வகையில், புலியை குத்திக் கொன்ற வீரனுக்காக, மன்னர்கள் வெளியிட்ட அரிய நாணயம் கிடைத்துள்ளது. இது, வரலாற்றின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து, நாணயவியல் ஆய்வாளர், மன்னர் மன்னன் கூறியதாவது: நாணயங்கள், வரலாற்றின் முக்கிய சாட்சி களாக உள்ளன. தமிழகத்தில், கடவுள், ராசி, சின்னங்கள், விலங்குகளின் உருவங்களுடன் பல நாணயங்கள் கிடைத்துள்ளன. இவை, முற்கால அரசர்களின் மத நம்பிக்கை மற்றும் மக்களின் வழிபாடுகளை நமக்கு தெரிவிக்கின்றன.

தஞ்சை மன்னர்கள்சில மாதங்களுக்கு முன், நாணயக் கண்காட்சி ஒன்றில், கரூரைச் சேர்ந்த வணிகரிடம் இருந்து, தஞ்சை பகுதி நாணயம் ஒன்றை வாங்கினேன். அதன் முன்புறம், ஒரு வீரன் காலை மடக்கிய நிலையில், தன்னை நோக்கி பாயும் புலியை எதிர்த்து சண்டை போட்டு, அதன் வயிற்றுக்குள் கத்தியை பாய்ச்சும் காட்சி உள்ளது. நாணயத்தின் பின்புறத்தில், நடுவில் ஒரு குத்துவாள், அதன் மேலும் கீழும், ’ராம ரா’ என, நாகரி வடிவில், எழுதப்பட்டு உள்ளது. எழுத்துகள் பாதி அளவே தெரிகின்றன. வீரனின் வீரத்தை போற்றவோ, முன்பே இறந்து வழிபடும் தெய்வமாக மாறிய, ஒரு புலிகுத்தியின் நினைவாகவோ, இந்த நாணயத்தை, தஞ்சையை ஆண்ட மன்னர்கள், வெளியிட்டு இருக்கலாம்.

புலிகுத்தி நடுகல்: இந்த நாணயக் காட்சியைப் போலவே, தமிழகத்தில், புலிகுத்தி பட்டான் நடுகற்கள் நிறைய உள்ளன. புலியுடன் மோதி உயிர்விடும் வீரனின் சந்ததியினர், புலிகுத்தி என்ற சிறப்பு பெயரை, தங்கள் பெயரின் முன் சேர்த்து உள்ளனர். கொங்கு பகுதி யில், இவ்வழக்கம் மிகுதியாக உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் சிறைபிடிக்கப்பட்ட பின், ஊமைத்துரைக்கு உதவிய, ’புலிகுத்தி நாயக்கர்’ என்பவரின் பெயர், இதற்கு உதாரணம். புலிகுத்தி வீரனின் நடுகற்களை, இன்றும் நீத்தார் நினைவாக மக்கள் வழிபடுகின்றனர். அவற்றிற்கு கோவில்கள் இல்லை. அரிதாக, ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவிலில் உள்ள, சீதேவி அம்மன் கோவில் பிரகாரத்தில், புலிகுத்தி கல் உள்ளது. கி.பி., எட்டாம் நுாற்றாண்டை சேர்ந்த, தமிழ் வட்டெழுத்துக்களுடன் கூடிய புலிகுத்தி கல் ஒன்று, 2014ல், திருப்பூர் அருகே, கவுண்டம்பாளையத்தில் கிடைத்தது. இது புலிகுத்தி கற்கள் ஆய்வில், முக்கியமானதாக கருதப்பட்ட நிலையில், புலிகுத்தி நாணயம், அவ்வகை ஆய்வுக்கு மேலும் உதவும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar