சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். சுமார் ஆயிரம் வருடங்கள் பழைமையான இக்கோயிலில் நரசிம்ம பெருமான் சுயம்புவாகக் காட்சியளிக்கிறார். கருவறையில் உள்ள சிலைகளுக்கு அக்காலகட்டத்தில் பால் அபிஷேகம் செய்து, கற்பூர தீபம் காட்டும் முன்னரே புற்றுமண் வந்து சிலைகளை மூடிவிடுமாம். அதனால், இங்குள்ள புற்றினை மறைத்து வைத்துள்ளனர். இப்புற்றில் எவ்வளவு நீர் ஊற்றினாலும் அது நிரம்பாது என்கின்றனர். இப்புற்று மண்ணைப் பூசினால், எப்படிப்பட்ட சரும நோயும் குணமாகும் என்று நம்பப்படுகிறது.