ஒரு பெண் கெடுக்கப்படுவதற்கு துணை போகிறவன், கொலைகாரனை தப்பிக்க உதவுபவன், பொய் சாட்சி சொல்பவன் ஆகியோர் அக்கிரமக்காரர்களை விட கொடியவர்கள். எந்த மனிதன் ஒரு அக்கிரமக்காரனுக்கு, துணை போனானோ, அந்த மனிதன் இறைவன் மற்றும் இறைத் தூதரின் பாதுகாப்பிலிருந்து விலகி விட்டான், என்கிறார் நாயகம். இறைவனால் கைவிடப்பட்டவனை எவராலும் காப்பாற்ற இயலாது. அவனுக்கு நோய் வந்தால், எந்த மருந்தும் குணமாக்காது. மரணம் வரும் வரை வேதனைத் தீயில் மூழ்குவான். மரணத்துக்கு பின்னும் நரகத்தில் அவதிப்படுவான். கூட்டுத்தொழுகைக்கு ஆதரவு கூட்டுப்பிரார்த்தனை மூலம் ஒற்றுமை வளர்கிறது என்பதால், நபிகள் நாயகம் கூட்டுத் தொழுகையை ஆதரிக்கிறார். ஒருவன் தனித்து நிறைவேற்றும் தொழுகையை விட மற்றவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றும் தொழுகை ரொம்ப ஏற்றமானது. ஒருவருடன் சேர்ந்து அவர் நிறைவேற்றும் தொழுகையை விட, இருவருடன் இணைந்து நிறைவேற்றும் தொழுகை சிறப்பானது. எந்தளவு அதிக நபர்களுடன் மனிதர்கள் தொழுகையை நிறைவேற்றுகின்றனரோ அது அல்லாஹ்விடம் அதிகக் கூலியைப் பெற்றுத்தரும்.