சிலர் பொய் சொல்லவும், சிலர் லஞ்சம் வாங்கவும், சிலர் பெண்களை ஏமாற்றவும் வெட்கப்படமாட்டார்கள். இவர்களுக்காகத் தான் நபிகள் நாயகம் சொன்னார், “நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது,” என்று. வெட்கப்படுதல் என்பது நல்ல குணம். எந்தக் கேவலம் வந்தால் என்ன! நமக்கு தேவை பணம் என்று அஞ்சாமல் ஒரு கூட்டம் சம்பாதிக்கிறது. யார் வாழ்க்கை எப்படி போனால் என்ன...தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பொய், பித்தலாட்டம் செய்பவர்கள் பெருகி விட்டார்கள். இப்படிப்பட்டவர்களெல்லாம், தங்கள் செயலுக்காக வெட்கப் படாவிட்டால் தண்டனை பெறுவர்.