தேவாரம் பாடி முடிந்ததும் திருச்சிற்றம்பலம் எனக் கூறுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2017 05:06
கோவில் என்றால், அது சிதம்பரம் நடராஜர் கோவிலைக் குறிக்கும். இங்கு தான் எல்லா சிவன் கோவில்களிலுள்ள சக்திகளும் இரவு நேரத்தில் ஒடுங்கும் என்பது ஐதீகம். சிதம்பரத்தை முதன்மையாக வைத்தே தேவாரம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் என்பது சிதம்பரம். சிவபெருமானேதன்னை திருச்சிற்றம்பல முடையான் எனக் கூறுவதாக வரலாறு சொல்கிறது. சிதம்பரத்தை தினமும் நினைவு கூர வேண்டும் என்பதன் அடிப்படையில் தேவாரம் பாடும் முன்னும், பின்னும் திருச்சிற்றம்பலம் என கூறும் வழக்கம் ஏற்பட்டது.